இந்தியா
ஓடிடியில் வரும் படங்கள், நிகழ்ச்சிகளையும் தணிக்கை செய்ய வேண்டும்: தணிக்கை துறைத் தலைவர்
ஓடிடி தளங்களையும் ஒழுங்குபடுத்தி தணிக்கை செய்ய வேண்டும் என்று தணிக்கைத் துறைத் தலைவர் ப்ரஸூன் ஜோஷி கூறியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தலைமையில் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஓடிடி தளங்களில் வரும் திரைப்படங்களும், தணிக்கைத் துறையின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.
அப்போது தணிக்கைத் துறை தலைவர் ஜோஷி் பேசுகையில், ஓடிடியில் வரும் திரைப்படங்கள் திரையரங்குகளில் அப்படியே வருகின்றன. எனவே, ஓடிடி படங்கள் திரைக்கு வரும் போது அவற்றையும் தணிக்கை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், ஓடிடியில் படம் பார்க்கும் போது அது ஒருவருக்கு மட்டும் சென்றடைகிறது, திரையரங்குகளில் பல ரசிகர்கள் படம் பார்ப்பதால் இரண்டுக்கும் இடையேயான விதிகள் மாறுபடுவதாக தெரிவித்தார்.
கூட்டத்தில் 2013, 2016 ஆம் ஆண்டு குழுக்கள் பரிந்துரைத்த பரிந்துரைகளின் மீத எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தணி்க்கை துறை தலைவர் ஜோஷி பதில் பேச முடியாமல், பின்னர் பதிலளிப்பதாக தெரிவித்தார்.