இந்தியா

சி.பி.எஸ்.இ. 10, 12 வகுப்புக்கான 2ம் பருவ பொதுத்தேர்வு அறிவிப்பு!

Published

on

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான இரண்டாம் பருவ தேர்வு குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு நாடு முழுவதும் குறைந்து வந்ததை அடுத்து பள்ளி கல்லூரிகள் நாடு முழுவதும் திறக்கப்பட்டு விட்டன என்பதும் அதேபோல் தேர்வுகளும் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான இரண்டாம் பருவ பொதுத் தேர்வு நடைபெறும் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 26ஆம் தேதி முதல் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் பருவ பொதுத் தேர்வு நேரடியாக நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

மேலும் தேர்வு அட்டவணையை www.cbse.nic.in என்ற இணையதளத்தில் வெளியாகி உள்ளதாகவும் அதனை மாணவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version