தொழில்நுட்பம்
சிபிஎஸ்இ தேர்வில் ChatGPT பயன்படுத்தப்படுகிறதா? மாணவர்களுக்கு எச்சரிக்கை..!
சிபிஎஸ்இ மாணவர்கள் தேர்வின் போது ChatGPT பயன்படுத்தக்கூடாது என்றும் அவ்வாறு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சிபிஎஸ்சி 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் நேற்று தொடங்கியுள்ள நிலையில் தேர்வு அறைக்குள் ChatGPT மற்றும் மொபைல் போன் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக ChatGPT என்பது உலக அளவில் பிரபலமாக வருகிறது என்பதும் இணையத்தில் என்ன தேட வேண்டும் என்றாலும் உடனே கொடுக்கும் கூகுள் கூட இந்த ChatGPT மென்பொருளை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளது என்பது தெரிந்தது.
ChatGPT என்பது மனிதர்களுடன் உரையாடுவது போலவே ஏஐ தொழில்நுட்பம் மூலம் உரையாடுவது என்பதும் இதில் என்ன கேட்டாலும் விளக்கமாக கொடுக்கும் என்பதும் அது மட்டும் இன்றி ஒரு தலைப்பை கொடுத்துவிட்டு அந்த தலைப்பில் கதை கட்டுரை தேவை என்றாலும் இந்த ChatGPT கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக மாணவர்கள் வீட்டு பாடம் செய்வது, கணக்கை சால்வ் பண்ணுவது உள்ளிட்ட எல்லாவற்றையும் ChatGPT மூலம் செய்து வருவதாக கூறப்படுகிறது. எல்லாமே ChatGPT செய்துவிட்டது என்றால் மனிதர்களுக்கு என்ன வேலை என்ற கேள்வி தான் எழுகிறது. உங்கள் கேள்விகளுக்கு உரையாடும் வகையில் பதில் சொல்லும் வகையில் இந்த மென்பொருள் அமைக்கப்பட்டுள்ளதால் இந்த மென்பொருள் தற்போது உலக அளவில் பிரபலமாகி வருகிறது என்பதும் இதன் பிரபலத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த google நிறுவனமே தனது நிறுவனத்தின் சார்பில் ஒரு ஏஐ மென்பொருளை உருவாக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ChatGPT தொழில்நுட்பத்தை சிபிஎஸ்இ மாணவர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுடன் தங்கள் தேர்வு அறைக்குள் ChatGPT எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்றும் அவ்வாறு ChatGPT பயன்படுத்தும் மாணவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ மாணவர்கள் தங்கள் கேள்வித்தாளில் உள்ள கேள்விகளை ChatGPT இடம் கூறினால் ஒரு சில நொடிகளில் பதில் வந்துவிடும் என்று அந்த பதிலை அவர்கள் விடைத்தாளில் எழுத அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து தடுக்கப்பட்டாலும் எதிர்காலத்தில் இதை தவிர்ப்பது என்பது சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்காவில் உள்ள மருத்துவ தேர்வு உட்பட ஒரு சில தேர்வுகளில் ChatGPT மென்பொருளை பயன்படுத்தி மாணவர்கள் விடைத்தாளை எழுதி உள்ளதாக கூறப்படுகிறது.