இந்தியா
சிபிஎஸ்இ தேர்வு தேதி திடீர் மாற்றம்: என்ன காரணம்?
சிபிஎஸ்இ தேர்வுகள் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதும் பத்தாம் வகுப்பிற்கு மார்ச் 9ஆம் தேதி முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரையும், பன்னிரண்டாம் வகுப்பு இருக்கு மார்ச் 9ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரையும் தேர்வுகள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இடையில் ரம்ஜான் பண்டிகை வருவதை அடுத்து அந்த தேதிகளில் நடைபெறும் தேர்வுகளை மட்டும் மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது குறித்து வெங்கடேசன் எம்பி மத்திய கல்வி துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த கடிதத்தின் அடிப்படையில் தற்போது ரம்ஜான் நாளில் நடைபெற இருக்கும் தேர்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி மே 15ஆம் தேதி நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு மே 21-ஆம் தேதிக்கும், மே 13ஆம் தேதி நடைபெற இருந்த பன்னிரண்டாம் வகுப்பு இயற்பியல் தேர்வு ஜூன் 8ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மே 14ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.