இந்தியா
வெளியானது பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாணவர்கள் ஆர்வம்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன என்பதும் மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டு மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கிடும் குழுக்களின் பரிந்துரைப்படி மதிப்பெண்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வெளியானது என்பதும் அதேபோல் சிபிஎஸ்சி பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலும் வெளியானது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வெளிவந்துள்ளது. இந்த மதிப்பெண் பட்டியலை பார்ப்பதற்கு மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இணையத்தில் தங்களது பதிவு எண்ணை பதிவு செய்து பார்த்து வருகின்றனர்.
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு முடிவுகள் இன்று சரியாக 12:00 மணிக்கு வெளியாகி உள்ளது. www.cbseresults.nic.in, cbse.gov.in ஆகிய இணையதளங்களில் இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடதக்கது.
மாணவர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தங்களுடைய மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என ஏற்கனவே சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.