இந்தியா
அட மமதாவை பாருங்க.. தர்ணா பந்தலிலும் கடுமையாக உழைக்கும் மமதா!
கொல்கத்தா: கொல்கத்தாவில் தர்ணாவிற்கு மத்தியில் மேற்கு வங்க முதல்வர் தன்னுடைய அலுவலக பணிகளை தொடர்ந்து கவனித்து வருகிறார்.
நேற்று இரவில் இருந்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். கொல்கத்தா மெட்ரோ சேனல் பகுதியில் அவர் தர்ணா இருந்து வருகிறார். கொல்கத்தா கமிஷனர் ராஜீவ் குமாரும் அவருடன் சேர்ந்து தர்ணா இருந்து வருகிறார்.
அதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் பலர் மமதா தர்ணா இருக்கும் இடத்தில் கூடி இருக்கிறார்கள். அதேபோல் சில வேறு மாநில தலைவர்களும் மாமாதாவை சந்திக்க வர இருப்பதாக கூறப்படுகிறது.
கொல்கத்தா கமிஷ்னர் ராஜீவ் குமாரை குற்றம்சாட்டி சிபிஐ நேற்று அவரை கைது செய்ய முயன்றது. இதை தடுக்கும் வகையில் கொல்கத்தா போலீஸ் சிபிஐ அதிகாரிகளை கைது செய்தது. அதன்பின் அந்த சிபிஐ அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர். இதனால்தான் கொல்கத்தாவில் மமதா பானர்ஜி இது தொடர்பாக தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.