இந்தியா

மோடியின் பைத்தியம்.. அவரின் முடிவு காலம் நெருங்கிவிட்டது.. மமதா பகீர்!

Published

on

டெல்லி: பிரதமர் மோடியின் முடிவுகாலம் நெருங்கிவிட்டது என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பேட்டியளித்து இருக்கிறார்.

சிபிஐக்கும் மேற்கு வங்க மாநில அரசுக்கும் இடையேயான பிரச்சனை பெரிதாகி இருக்கிறது. மேற்கு வங்க முதல்வர் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்.

கொல்கத்தாவில் மத்திய அரசுக்கு எதிராக அவர் தர்ணா செய்து வருகிறார். மத்திய அரசை ஆட்சியில் இருந்து அகற்றாமல் விடமாட்டேன் என்று மமதா சபதம் செய்து இருக்கிறார்.

இந்த நிலையில் தர்ணாவின் போது மமதா பானர்ஜி அளித்த பேட்டியில், இன்றில் இருந்து மேற்கு வங்கம் முழுக்க திரிணாமுல் காங்கிரஸ் அமைதி போராட்டம் நடத்தும். பிரதமர் மோடிக்கு மனநலம் பாதிக்கப்பட்டுவிட்டது. மோடியின் முடிவுகாலம் நெருங்கிவிட்டது. இவர்களை முதலில் மத்தியில் இருந்து அகற்ற வேண்டும். இந்த மத்திய ஆட்சியை அகற்றுவதுதான் அவசர தேவை.

seithichurul

Trending

Exit mobile version