உலகம்

சிபிஐ சிறப்பு இயக்குனர் லஞ்சம் வாங்கினார்.. ஆதாரம் உள்ளது.. சிபிஐ இயக்குனர் பகீர்!

Published

on

டெல்லி: சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கியதற்கான எல்லா ஆதாரமும் இருக்கிறது என்று சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா டெல்லி ஹைகோர்ட்டில் தெரிவித்துள்ளார்.

சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா மத்திய அரசால் கட்டாய விடுப்பில் செல்ல ஆணையிடப்பட்டது. இதற்கு எதிராக அவர் தொடுத்த வழங்கில் உச்ச நீதிமன்றத்தில் நேற்றுதான் விசாரணை நடந்து முடிந்தது.

குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் மொயின் குரேஷி பண மோசடி மற்றும் வரி மோசடி செய்த வழக்கில் சிக்கி இருக்கிறார்.  குரேஷியின் வழக்கில் தொடர்புடைய நபர்களை விடுவிக்க சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ அமைப்பு வழக்கு பதிவு செய்து விசாரித்தது. சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா மூலம் அஸ்தானா மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

 

 

 

 

seithichurul

Trending

Exit mobile version