Connect with us

இந்தியா

பழைய வழக்கில் சத்யபால் மாலிக்கிற்கு சிபிஐ சம்மன்!

Published

on

முன்னாள் ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இவர் சில தினங்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் புல்வாமா தாக்குதல் குறித்து மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

#image_title

கடந்த 2019- ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தி 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இது நாடு முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் சமீபத்தில் இந்த விவகாரம் தொடர்பாக பேசிய ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக், மத்திய உள்துறை அமைச்சகத்தின் திறமையின்மையின் காரணமாகவே புல்வாமா தாக்குதல் ஏற்பட்டது. ராணுவ வீரர்களை அழைத்துச் செல்ல உள்துறை அமைச்சகத்திடம் விமானம் கேட்கப்பட்டது. ஆனால், உள்துறை அமைச்சகம் விமானம் தர மறுத்து சாலை வழியாக செல்ல உத்தரவிட்டது.

#image_title

சாலை வழியாக சென்றபோது வீரர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக செய்யப்படவில்லை. அன்று மாலையே இது குறித்து பிரதமரிடம், இது நம் தவறு விமானம் வழங்கப்பட்டு இருந்தால் இது நடந்திருக்காது என தெரிவித்தேன். ஆனால் பிரதமர், வெளியில் யாரிடமும் இதனை கூற வேண்டாம், அமைதியாக இருக்கும்படி கூறினார். தேசிய பாதுகாப்பு செயலாளரும் அமைதியாக இருக்கும்படி கூறினார். வெடி மருந்துகளுடன் தீவிரவாதிகள் வந்த வாகனம் 10, 12 நாட்கள் சுற்றித் திரிந்ததை உளவுத்துறை சரியாக கவனிக்கவில்லை. இது உளவுத்துறையினர் தோல்வி என்ற அதிர்ச்சி தகவலை கூறினார்.

இந்நிலையில் தற்போது சத்யபால் மாலிக் நேரில் ஆஜராகும்படி சிபிஐ சம்மன் ஒன்றை அனுப்பியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 2018 முதல் 2019 வரை ஆளுநராக பதவி வகித்தபோது அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் நீர்மின் திட்டம் ஆகியவற்றில் ஊழல் நடைபெற்றிருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இது குறித்து வழக்குப் பதிவு செய்த சிபிஐ, சத்யபால் மாலிக்கிடம் விசாரணை நடத்தியது. இந்த நிலையில் தற்போது அவரை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. சத்யபால் மாலிக் பிரதமர் மோடிக்கு எதிராக புல்வாமா தாக்குதல் குறித்து பேசியதால் தான் அவரை மீண்டும் விசாரணைக்கு அழைத்துள்ளதாக பரவலாக பேசப்படுகிறது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!