தமிழ்நாடு

மு.க.ஸ்டாலினை சிபிஐ தேடிக் கொண்டிருக்கிறது: அமைச்சர் அதிரடி!

Published

on

அதிமுக ஆட்சி கவிழும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கூறிவருதற்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அதிரடியாக பதிலளித்துள்ளார்.

சபாநாயகர் மீது திமுக அளித்திருந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை திரும்ப பெற்றிருந்தாலும் அதிமுக ஆட்சி கவிழும் என தொடர்ந்து பேசி வருகிறார் ஸ்டாலின். இந்நிலையில் கடலூரில் நேற்று முன்தினம் பேசிய ஸ்டாலின், நான் சொல்கிறேன் இந்த ஆட்சி விரைவில் கவிழப்போகிறது என்பதுதான் உண்மை என்று குறிப்பிட்டார். மேலும், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வலியுறுத்தாதது என்பது புலி பாய்வதற்கு முன் பதுங்குவது போல என்று கூறினார்.

இந்நிலையில் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து அதிமுக ஆட்சி கவிழும் எனக்கூறி வருவது குறித்து அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர், அதிமுக அரசு தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் நீடிக்கும். இந்த ஆட்சி மட்டுமல்ல, அடுத்த ஆட்சியும் அதிமுக ஆட்சிதான். அதனால், மு.க.ஸ்டாலின் தன்னிடம் இருக்கும் அழுக்கை முதலில் அகற்ற வேண்டும்.

திமுக ஆட்சியிலே 2007, 2008, 2009, 2010, 2011 வருடக் கால கட்டத்திலே கூட்டுறவு நகைக் கடன் பெற்றுத் தருவதாகவும், மகளிர் சுயஉதவி குழு நிதி வாங்கித் தருவதாகவும் சொல்லி 100 கோடி வரை முறைகேடு நடந்திருப்பதால் சென்னை உயர் நீதிமன்றம் இது பற்றி விசாரிக்க சிபிஐக்கு ஆணையிட்டுள்ளது. எனவே, ஸ்டாலினை சிபிஐ தேடிக் கொண்டிருக்கிறது. ஸ்டாலின் முதலில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்றார் அதிரடியாக.

seithichurul

Trending

Exit mobile version