தமிழ்நாடு

நீட், டாஸ்மாக் எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து! முதல்வர் அறிவிப்பு

Published

on

கடந்த அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு மற்றும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படுவதாக சற்றுமுன் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்

நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட 446 வழக்குகள் மற்றும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என போராடியவர்கள் வழக்குகள் என மொத்தம் 868 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ கடந்த 24.6.2021 அன்று சட்டப்பேரவையில்‌, மாண்புமிகு ஆளுநர்‌ உரையின்‌ மீதான விவாதத்திற்கு அளித்த பதிலுரையில்‌ “கடந்த ஆட்சியில்‌ கருத்துச்‌ சுதந்திரத்திற்கு எதிராக ஊடகங்கள்‌ மீது அரசு தொடர்ந்த வழக்குகள்‌, ஒன்றிய அரசின்‌ மூன்று வேளாண்‌ சட்டங்களுக்கு எதிராகப்‌ போராடிய விவசாயிகள்‌ மீதான வழக்குகள்‌, குடியுரிமைத்‌ திருத்தச்‌ சட்டத்திற்கு எதிராகப்‌ போராடியவர்கள்‌ மீதான வழக்குகள்‌ மீத்தேன்‌ – நியூட்ரினோ – கூடங்குளம்‌ அணு உலை – சேலம்‌ எட்டு வழிச்சாலை ஆகிய திட்டங்களுக்கு எதிராக அறவழியில்‌ போராடிய மக்கள்‌ மீது போடப்பட்ட வழக்குகள்‌ அனைத்தும்‌ திரும்பப்‌ பெறப்படும்‌’ என்று அறிவித்திருந்தார்கள்‌. அந்த அறிவிப்பினைச்‌ செயல்படுத்தும்‌ விதமாக, 5,570 வழக்குகள்‌ ஏற்கெனவே திரும்பப்‌ பெறப்பட்டுள்ளன.

அதன்‌ தொடர்ச்சியாக, கடந்த 13-9-2021 அன்று காவல்‌ துறை மானியக்‌ கோரிக்கையின்‌ மீதான விவாதத்திற்கு பதிலளித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ உரையாற்றுகையில்‌, “நீட்‌ தேர்வு மற்றும்‌ டாஸ்மாக்‌ மதுக்கடைகளுக்கு எதிராகப்‌ போராட்டம்‌ நடத்தியவர்கள்‌ மீது முந்தைய அரசால்‌ பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத்‌ திரும்பப்‌ பெற நடவடிக்கைகள்‌ எடுக்கப்படும்‌” எனவும்‌ அறிவித்திருந்தார்கள்‌.

அந்த அறிவிப்பினையும்‌ செயல்படுத்தும்‌ வகையில்‌, நீட்‌ தேர்வுக்கு எதிராக அறவழியில்‌ போராடியவர்கள்‌ மீது பதியப்பட்ட 446 வழக்குகளும்‌, டாஸ்மாக்‌ மதுக்கடைகளுக்கு எதிராகப்‌ போராடியவர்கள்‌ மீது பதியப்பட்ட 422 வழக்குகளும்‌, ஆக மொத்தம்‌ 868 வழக்குகளைத்‌ திரும்பப்‌ பெறவும்‌, அதன்‌ மீதான அனைத்து மேல்நடவடிக்கைகளையும்‌ கைவிடவும்‌, தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ இன்று (27-9- 2021) ஆணையிட்டுள்ளார்கள்‌.

author avatar
seithichurul

Trending

Exit mobile version