Connect with us

தமிழ்நாடு

நீட், டாஸ்மாக் எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து! முதல்வர் அறிவிப்பு

Published

on

கடந்த அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு மற்றும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படுவதாக சற்றுமுன் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்

நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட 446 வழக்குகள் மற்றும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என போராடியவர்கள் வழக்குகள் என மொத்தம் 868 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ கடந்த 24.6.2021 அன்று சட்டப்பேரவையில்‌, மாண்புமிகு ஆளுநர்‌ உரையின்‌ மீதான விவாதத்திற்கு அளித்த பதிலுரையில்‌ “கடந்த ஆட்சியில்‌ கருத்துச்‌ சுதந்திரத்திற்கு எதிராக ஊடகங்கள்‌ மீது அரசு தொடர்ந்த வழக்குகள்‌, ஒன்றிய அரசின்‌ மூன்று வேளாண்‌ சட்டங்களுக்கு எதிராகப்‌ போராடிய விவசாயிகள்‌ மீதான வழக்குகள்‌, குடியுரிமைத்‌ திருத்தச்‌ சட்டத்திற்கு எதிராகப்‌ போராடியவர்கள்‌ மீதான வழக்குகள்‌ மீத்தேன்‌ – நியூட்ரினோ – கூடங்குளம்‌ அணு உலை – சேலம்‌ எட்டு வழிச்சாலை ஆகிய திட்டங்களுக்கு எதிராக அறவழியில்‌ போராடிய மக்கள்‌ மீது போடப்பட்ட வழக்குகள்‌ அனைத்தும்‌ திரும்பப்‌ பெறப்படும்‌’ என்று அறிவித்திருந்தார்கள்‌. அந்த அறிவிப்பினைச்‌ செயல்படுத்தும்‌ விதமாக, 5,570 வழக்குகள்‌ ஏற்கெனவே திரும்பப்‌ பெறப்பட்டுள்ளன.

அதன்‌ தொடர்ச்சியாக, கடந்த 13-9-2021 அன்று காவல்‌ துறை மானியக்‌ கோரிக்கையின்‌ மீதான விவாதத்திற்கு பதிலளித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ உரையாற்றுகையில்‌, “நீட்‌ தேர்வு மற்றும்‌ டாஸ்மாக்‌ மதுக்கடைகளுக்கு எதிராகப்‌ போராட்டம்‌ நடத்தியவர்கள்‌ மீது முந்தைய அரசால்‌ பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத்‌ திரும்பப்‌ பெற நடவடிக்கைகள்‌ எடுக்கப்படும்‌” எனவும்‌ அறிவித்திருந்தார்கள்‌.

அந்த அறிவிப்பினையும்‌ செயல்படுத்தும்‌ வகையில்‌, நீட்‌ தேர்வுக்கு எதிராக அறவழியில்‌ போராடியவர்கள்‌ மீது பதியப்பட்ட 446 வழக்குகளும்‌, டாஸ்மாக்‌ மதுக்கடைகளுக்கு எதிராகப்‌ போராடியவர்கள்‌ மீது பதியப்பட்ட 422 வழக்குகளும்‌, ஆக மொத்தம்‌ 868 வழக்குகளைத்‌ திரும்பப்‌ பெறவும்‌, அதன்‌ மீதான அனைத்து மேல்நடவடிக்கைகளையும்‌ கைவிடவும்‌, தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ இன்று (27-9- 2021) ஆணையிட்டுள்ளார்கள்‌.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்52 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் (28, ஜூலை 2024)

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 மணி நேரம் ago

இந்த வார ராசிபலன் (2024, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 வரை)

வணிகம்11 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு12 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு12 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா13 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு14 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்14 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா14 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்5 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்7 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!