Connect with us

தமிழ்நாடு

வழக்குகள் வாபஸ்: சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

Published

on

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது அதிமுக அரசு தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படுவதாக சற்றுமுன் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.

மத்திய கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய வேளாண்மை சட்டத்தை இயற்றியது என்பதும் இந்த வேளாண்மை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் உள்பட ஒரு சில மாநிலங்களில் விவசாயிகள் டெல்லியில் கடந்த சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை என்பதால் பல மாதங்களாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது அதிமுக அரசு தொடர்ந்த வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெறப்படுவதாக சட்டமன்ற சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சியின் உறுப்பினர் வேல்முருகன் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 385 நாட்களாக உழவர்கள் டெல்லியில் போராடி வருகின்றனர் என்றும் விவசாயிகள் வாழ்வு செழிக்க திமுக அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் அதனை அடுத்தே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக முதல்வர் கூறினார். இந்த தீர்மானத்தின் போது வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் மூன்று வேளாண்மை சட்டங்களும் நமது நாட்டின் வேளாண் வளர்ச்சிக்கு உகந்ததாக இல்லை என்றும் விவசாயிகளின் நலனுக்கு உகந்ததாக இல்லாத மத்திய அரசின் 3 வேளாண்மை சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவை சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
வணிகம்3 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு4 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா5 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா6 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா