சினிமா செய்திகள்

காட்டுக்குள் படப்பிடிப்பு- சிவகார்த்திகேயனின் ‘டான்’ படக்குழுவின் மீது வழக்குப்பதிவு

Published

on

நடிகர் சிவகார்த்திகேயனின் டான் படக்குழுவினர் காட்டுக்குள் அனுமதி இன்றி படப்பிடிப்பு நடத்தியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேகேயன் மற்றும் ப்ரியங்கா ஆகியோர் இணைந்து நடித்து வரும் திரைப்படம் டான். இந்தப் படத்தை லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்க இசை அமைப்பாளர் அனிருத் இசை அமைத்து வருகிறார். இந்தப் படத்தில் மேலும் பல முக்கியக் கதாபாத்திரங்களில் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, ஆர்ஜே விஜய், பால சரவணன், சிவாங்கி எனப் பலரும் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் கோயம்புத்தூர் பகுதிகளில் நடந்து வருகிறது. சமீபத்தில் கோயம்புத்தூரில் ஆனைமலை பகுதியில் காட்டுக்குள் டான் படப்பிடிப்பு நடந்துள்ளது. வனப்பகுதிக்குள் படப்பிடிப்பு எடுக்க முன் அனுமதி வனத்துறையிடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், அப்படி அனுமதி எதுவும் படக்குழுவினர் பெறவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் படத்தின் இயக்குநர் உட்பட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 19,400 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version