தமிழ்நாடு
யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து: மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு!
யூடியூபர் மாரிதாஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுவதாக சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
திமுக மீது அவதூறு பரப்புவதாக யூடியூபர் மாரிதாஸ் மீது தூத்துகுடி நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மாரிதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்த போது திமுக மீது அவதூறு பரப்பியதாக யூடியூபர் மாரிதாஸ் மீது தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கை ரத்து செய்யப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார். இதனால் இந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது.
ஏற்கனவே குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக யூடியூபர் மாரிதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளையால் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.