Connect with us

தமிழ்நாடு

எஸ்பி வேலுமணி விவகாரம்: 10 நிறுவனங்கள் மற்றும் 7 பேர்கள் மீது வழக்குப்பதிவு!

Published

on

முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணியின் கோவை வீடு உள்பட 52 இடங்களில் வருமான வரித்துறையினர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் வெற்றி வேலுமணி மற்றும் அவரது சகோதரர் உள்பட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி சென்னை மாநகராட்சி ஒப்பந்தத்தில் ரூபாய் 464 கோடியும் கோவை மாநகராட்சி ஒப்பந்தம் ரூபாய் 346 கோடி ஊழல் நடந்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திமுகவின் ஆர் எஸ் பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் தரப்பட்ட புகாரின் அடிப்படையில் தான் இந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி சென்னையில் உள்ள எம்எல்ஏ விடுதியில் உள்ள எஸ் பி வேலுமணி அறையிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அரசு ஒப்பந்தங்களை தனது உறவினர்கள் நண்பர்களுக்கு வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் எஸ்பி வேலுமணி விவகாரத்தில் 10 நிறுவனங்கள் மற்றும் ஏழு நபர்கள் என 17 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது/ வேலுமணியின் சகோதரர் ஆர். சந்திரசேகர், கே. சந்திரசேகர், முருகேசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் மேலும் ஜேசுராஜன் உள்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன

எஸ் பி வேலுமணி மீதான புகாரில் 10 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவலின்படி என்னென்ன நிறுவனங்கள் என்பதை தற்போது பார்ப்போம். கேசிபி இன்ஜினியர்ஸ், ஏஸ் டெக் மெஷினரி, காஸ்ட்ரானிக்ஸ் இன்ஃப்ரா, ஸ்ரீ மஹா கணபதி ஜூவல்லர்ஸ், ஆலயம் ஃபவுண்டேசன், வைதுர்யா ஹோட்டல்ஸ், ரத்ன லட்சுமி ஹோட்டல்ஸ், AR ES PE இன்ஃப்ரா, ஆலம் கோல்ட் அண்ட் டயமண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்8 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்24 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்23 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!