Connect with us

கிரிக்கெட்

சென்னைப் போட்டியின் ‘மாஸ்டர்’ அஷ்வினை ஜாலி இன்டர்வியூ செய்த கேப்டன் கோலி!

Published

on

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர் இந்திய சுழற் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின். அவரின் அற்புதமான சதத்திற்காகவும், ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் கைப்பற்றிய திறனிற்காகவும் ஆட்ட நாயகன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, அஷ்வினை நேர்காணல் செய்துள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றியடைந்துள்ளது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1 – 1 என சமன் செய்துள்ளது.

இந்நிலையில் அஷ்வினை இன்டர்வியூ செய்த கேப்டன் கோலி, ‘இந்த வெற்றியையும் உங்களின் ஆட்டத்தையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?’ என்று கேட்டார்.

அதற்கு அஷ்வின், ‘என் கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக எப்படி உணர்கிறேன் என்று சொல்ல முடியாமல் தவிக்கிறேன். இப்படியான ஆட்டத்தை வெளிப்படுத்தியற்கு மிக்க மகிழ்ச்சி’ என்றார்.

தொடர்ந்து கோலி, ‘உங்கள் ஆட்டத்தில் ஒரு மாற்றம் இருப்பதாக நான் உணருகிறேன். முன்பிருந்த அஷ்வினுக்கும் இப்போதைய அஷ்வினுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. ஆஸ்திரேலியாவிலும் நான் அதைப் பார்த்தேன்’ என்று கேட்டார்.

‘கொரோனா லாக்டவுன் காலக்கத்தில் கிரிக்கெட் இல்லாமல் மிகவும் சோர்வாக உணர்ந்தேன். அந்த நேரத்தில் நான் எப்படி விளையாடுகிறேன், அதை மற்றவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை கவனித்தேன். ஒரு கட்டத்தில் மற்றவர்களுக்கு நான் யார் என்பதை நிரூபிப்பதை விட, எனக்குள் நான் சில விஷயங்களை உறுதிப்படுத்த விரும்பினேன்.

அந்த உறுதித் தன்மை ஒரு சாந்தமான மனநிலையைக் கொடுத்துள்ளது. அது தான் தற்போது மைதானத்திலும் வெளிப்படுகிறது என நினைக்கிறேன்.

எனக்கு ஒரு விஷயம் திட்ட வட்டமாக புரிந்தது என்னவென்றால், நமக்குள் சரியென ஒரு விஷயம் தோன்றினால் அதன் படி நடக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அது தான் சமீப காலமாக எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது’ என முடித்தார்.

 

இந்தியா46 நிமிடங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்1 மணி நேரம் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு4 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!