தமிழ்நாடு
கேப்டன் விஜயகாந்த் ரிட்டர்ன்ஸ்! தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி!
![vijayakanth hbd1 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/vijayakanth-hbd1.jpg)
கேப்டன் விஜயகாந்த் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி உடல் நல பரிசோதனை செய்வதற்காக துபாய் சென்று இருந்தார் என்பதும் அவருடன் அவருடைய மனைவி பிரேமலதா மற்றும் மகன் சண்முக பாண்டியன் ஆகியோரும் சென்று இருந்தார்கள் என்பதும் தெரிந்ததே.
மேலும் துபாய் மருத்துவமனையில் அவரது உடல் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவரது உடல்நிலை ஆரோக்கியமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியதாக செய்திகள் வெளியானது.
மேலும் துபாய் மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ்களுடன் கேப்டன் விஜயகாந்த், தான் நடித்த சத்ரியன் திரைப்படத்தை பார்த்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி கேப்டன் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சை முடிந்து துபாயிலிருந்து சென்னை திரும்பியுள்ளார். அவரை விமான நிலையத்தில் ஏராளமான தேமுதிக தொண்டர்கள் வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கேப்டன் விஜயகாந்த் மீண்டும் உடல்நலம் தேறி வருவதை அடுத்து அவர் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டனின் குரலை கேட்டு பல ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் வரும் தேர்தலில் அவர் பிரச்சாரம் செய்தால் நிச்சயம் தேமுதிகவுக்கு நல்ல வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.