இந்தியா
41 மணி நேரம் விமானத்தில் வர முடியாது.. மெகுல் சோக்சி எழுதிய பகீர் கடிதம்!
டெல்லி: 41 மணி நேரம் விமானத்தில் பயணிக்க முடியாது என்பதால் இந்தியா வர முடியாது என்று கடன் மோசடி வழக்கில் சிக்கி இருக்கும் மெகுல் சோக்சி கடிதம் எழுதியுள்ளார். அவரின் இந்த பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ13,000 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு இடங்களில் பல்வேறு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.
நீரவ் மோடியை இந்தியா கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய மெகுல் சோக்சி எழுதிய கடிதம் ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீரவ் மோடியின் கீதாஞ்சலி வைர நிறுவனம்தான் இந்த மோசடி வழக்கில் சிக்கி இருப்பது. இதன் சேர்மேனாக இருந்தவர்தான் மெகுல் சோக்சி. கடன் வாங்கியதிலும், பஞ்சாப் வங்கியை ஏமாற்றியதிலும் இவருக்கு முக்கிய பங்குள்ளதாக கூறப்படுகிறது . இவர் மீது வழக்கு பதியப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.