Connect with us

இந்தியா

பணிப்பெண்ணிடம் உதவி கேட்ட பெண் பயணியை விமானத்தில் இருந்து இறக்கிவிட்ட கொடூரம்.. என்ன நடந்தது?

Published

on

விமானத்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் பணிப்பெண்ணிடம் உதவி கேட்டதை அடுத்து அந்த பெண் பயணி விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாகவே விமானத்தில் நடக்கும் சர்ச்சைக்குரிய விஷயங்கள் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன் போதை பயணி ஒருவர் பெண் பயணி ஒருவர் மீது சிறுநீர் கழித்த விவகாரம் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு அந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது தெரிந்ததே. இந்த சம்பவத்தில் விமான நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் ஒருவர் தனது பையை மேலே வைக்க பணிப்பெண்ணிடம் உதவி கேட்டதால் அவர் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் இருந்து அமெரிக்கா செல்ல இருந்த பெண் பயணி ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்திருந்ததாகவும் அதனால் பலவீனமாக இருந்ததாகவும் தெரிகிறது. மீனாட்சி சென்குப்தா என்ற அந்த விமான பயணி தனது கையில் ஐந்து பவுண்டுக்கு மேல் எடை உள்ள பைப்பையை வைத்திருந்தார்.

விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகள் அவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்து அவருக்கு சக்கர நாற்காலி கொடுத்து விமானத்தில் ஏற உதவி செய்தனர். ஆனால் விமானத்திற்கு உள்தான் அவருக்கு பல அசெளகரியங்கள் ஏற்பட்டன. தனது இருக்கை அருகிலேயே அவர் தனது பையை வைத்திருந்த நிலையில் பணிப்பெண் ஒருவர் வந்து பையை கேபினில் வைக்குமாறு சொன்னார்.

அப்போது அந்த பெண் பயணி தன்னால் இந்த பையை தூக்க முடியாது என்றும் நீங்கள் உதவி செய்தால் கேபினில் வைத்து விடுகிறேன் என்றும் கூறினார்.. ஆனால் அதற்கு அந்த பணியாளர் அது தன்னுடைய வேலை அல்ல என்றும் உடனடியாக பையை வைக்க விட்டால் நீங்கள் விமானத்திலிருந்து இறங்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் கூறியதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

இதனை அடுத்து பெண் பயணி மீனாட்சி சென்குப்தா விமானத்தில் விதிகளை கடைபிடிக்கவில்லை என்று கூறி இறக்கிவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த விஷயம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் மற்றும் டெல்லி மகளிர் ஆணையம் ஆகியவற்றுக்கு மீனாட்சி சென்குப்தா புகார் அளித்துள்ளார்.

ஜோதிடம்1 மணி நேரம் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு2 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!