தமிழ்நாடு
ஆசிரியர்களுக்கு இனி இந்த சலுகை கிடையாது: அதிர்ச்சி தந்த பள்ளிக்கல்வித்துறை
ஆசிரியர்களுக்கு இனி ஈடிடி விடுமுறைக்கு பணம் கிடையாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களுக்கு 15 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுகிறது என்றும் அந்த விடுமுறையை ஆசிரியர்கள் எடுக்காமல் இருந்தால் அவர்களுக்கு வருட கடைசியில் பணமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இனிமேல் ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்புக்கு பணம் கிடையாது என்றும் அந்த விடுமுறையை ஆசிரியர்கள் கட்டாயமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் ஏற்கனவே ஈட்டிய விடுப்பு பணம் பெறும் நடைமுறையை நிறுத்தி வைக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது