உலகம்
கனடா பிரதமர் ட்ரூடோ திடீர் தலைமறைவு? என்ன காரணம்?
![canada pm family - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/01/canada-pm-family.jpg)
கனடா பிரதமர் ட்ரூடோ குடும்பத்துடன் தலைமறைவாகி இருப்பதாக வந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கனடா எல்லையை கடக்கும் லாரி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டுமென கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு ஓட்டுநர்களை கடும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
கட்டாய தடுப்பூசி அறிவிப்புக்கு எதிராக கனடாவில் மிகப்பெரிய போராட்டம் நடந்துவருகிறது. நூற்றுக்கணக்கான டிரக்குகள் தலைநகர் ஒட்டாவாவில் கூடியதை அடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்துடன் ரகசிய இடத்தில் தலைமறைவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
கொரோனா, ஒமிக்ரான் வைரஸ்களை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் கனடா அரசும் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அந்த வகையில் அமெரிக்கா – கனடா எல்லையை கடக்கும் லாரி ஓட்டுநர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று சமீபத்தில் கனடா அரசு அறிவித்தது.
இந்த அறிவிப்புக்கு தடுப்பூசி செலுத்தாத ஓட்டுநர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக ஒட்டாவாவில் பெரிய பெரிய டிரக்குகள் குவிந்துள்ளதாகவும் இதன் காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் ரகசிய இடத்தில் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாதுகாப்பாக உள்ளார் என்றும் அவரது உயிருக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றும் கனடா அரசு தெரிவித்துள்ளது.