சினிமா

மன்னிப்பு கேட்க முடியாது: மாஸ் காட்டிய ஏ.ஆர். முருகதாஸ்!

Published

on

சர்கார் படத்தில் அதிமுக அரசின் இலவச பொருட்களை ஏரிப்பது போன்ற காட்சிகளை படமாக்கிய காரணத்திற்காக நிபந்தனையற்ற மன்னிப்பை இயக்குநர் முருகதாஸ் கேட்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் ஐகோர்ட்டில் மனு அளிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த ஏ.ஆர். முருகதாஸ், அரசியல் திட்டங்களை விமர்சிப்பது எனது தனிப்பட்ட கருத்து சுதந்திரம். காட்சிகளை நீக்க கோரிக்கை வைத்தனர். தயாரிப்பாளர் தரப்புக்கு பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதற்காக காட்சிகளை நீக்கினோம். ஆனால், தற்போது நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும், வருங்காலத்தில் அரசை விமர்சிக்க கூடாது என்றும் கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இதனை ஒருபோதும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என அதிரடியாக ஏ.ஆர். முருகதாஸ் பதிலளித்துள்ளார்.

இவரது இந்த பதிலுக்கு அதிமுக அரசு என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

seithichurul

Trending

Exit mobile version