உலகம்

திடீரென பெய்த பணமழை: முண்டியடித்த எடுத்த பொதுமக்களின் வைரல் வீடியோ!

Published

on

திடீரென சாலையில் பணமழை பெய்ததை அடுத்து அந்த பகுதியில் உள்ளவர்கள் பணத்தை சேகரித்த வீடியோ காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் டிரக் ஒன்றில் பணக்கட்டுகள் ஏற்றுக் கொண்டு செல்லப்பட்டது. அப்போது அந்த டிரக்கின் அந்தக் கதவு திடீரென திறந்ததை அடுத்து அதில் இருந்த பணக்கட்டுக்கள் சாலையில் சிதறியது.

ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பணம் சாலையில் சிதறியதை அடுத்து அந்த பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக பணத்தை ஆர்வத்துடன் எடுக்கத் தொடங்கினார்கள். அதுமட்டுமின்றி காரில் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் தங்களது வாகனத்தை நிறுத்திவிட்டு பணத்தை சேகரித்தனர்.

இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த நிலையில் டிரக்கின் நிர்வாகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் பணத்தை அள்ளிச் சென்றவர்கள் மீண்டும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் இல்லையேல் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள வீடியோக்களின் அடிப்படையில் பணத்தை எடுத்தவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை காவல் துறையும் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ஒரு சிலர் பணத்தை திருப்பி அளித்து வருவதாகவும் பலர் இன்னும் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version