இந்தியா

சி.ஏ. தேர்வுகள் ஒத்திவைப்பு: இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பு அறிவிப்பு

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது சிஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய கணக்கு தணிக்கையாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக சிஏ தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ள இந்திய கணக்கு தணிக்கையாளர் அமைப்பு இந்த தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளது.

வரும் மே மாதம் 21ம் தேதி நடைபெற இருந்த எழுத்து தேர்வு மற்றும் மே 22ஆம் தேதி நடைபெற இருந்த இடைநிலைத் தேர்வு ஆகிய இரண்டு தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய கணக்கு தணிக்கையாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் இந்த தேர்வை எழுத காத்திருந்தவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை இந்தியாவில் மிக வேகமாக பரவி வருவதன் காரணமாக எந்த தேர்வும் நடத்தப்படும் சூழ்நிலை தற்போது இல்லை என்பதால் சிஏ போன்ற முக்கியமான தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஐஏஎஸ் உள்பட ஒரு சில தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதை பார்த்தோம்.

Trending

Exit mobile version