தமிழ்நாடு

ரூ.14 கோடி மோசடி: சி.விஜயபாஸ்கர் மீது கேரள பெண் போலீசில் புகார்

Published

on

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது கேரள பெண் ஒருவர் ரூபாய் 14 கோடி மோசடி புகார் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களாக முன்னாள் அமைச்சர்கள் மீது அதிரடியாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர் என்பதும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின.

குறிப்பாக முன்னாள் அமைச்சர்களான சி விஜயபாஸ்கர், எஸ்பி வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஒரு சில அமைச்சர்களை வீடுகளில் சோதனை நடைபெற்றது என்பதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அதிரடியாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்தனர் என்பதும் அவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கேரள பெண் ஷர்மிளா என்பவர் தன்னிடம் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் அவர்கள் 14 கோடி மோசடி செய்ததாக போலீசில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சி விஜயபாஸ்கர் அவர்களால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாகவும் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கேரள பெண் ஷர்மிளா என்பவர் கோரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version