Connect with us

தமிழ்நாடு

‘ஊத்தி கொடுக்கிறதுதான அவன் பொழப்பு…’- தினகரனை கண்டபடி பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம்

Published

on

அதிமுகவில் சசிகலா – எடப்பாடி பழனிசாமி முகாம்களுக்கு இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சொத்துக் குவிப்பு வழக்கில், சிறைத் தண்டனையை முடித்துவிட்டு, மூன்று நாட்களுக்கு முன்னர் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு வந்தார் சசிகலா. அவருக்கு அமமுக தொண்டர்கள் மற்றும் அதிமுகவில் இருக்கும் அவரது ஆதரவாளர்கள் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர். கர்நாடகா எல்லையில் தொடங்கிய இந்த வரவேற்பானது, சென்னை தியாகராய நகரில் உள்ள தனது வீட்டுக்கு சசிகலா வரும் வரை தொடர்ந்தது. அவருக்கு சுமார் 22 மணி நேரம் தொடர் வரவேற்பு கொடுத்தனர் ஆதரவாளர்கள். சசிகலாவின் இந்த மாஸ் கம்-பேக் தமிழக அரசியல் தளத்தில் முக்கியப் பேசு பொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில் சசிகலாவை அதிகம் விமர்சிப்பதை விட, அதிமுகவின் அமைச்சர்களும் முக்கிய நிர்வாகிகளும் டிடிவி தினகரை சாடி வருகின்றனர். நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூட, ‘தினகரன் தான் எங்கள் கட்சியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ-க்களை பிரித்து அழைத்துச் சென்றவர். அவர் தான் இந்த ஆட்சிக் கவிழ வேண்டும் என்று செயல்பட்டவர். அவர் தான் தற்போது அமமுக என்னும் கட்சியை ஆரம்பித்து அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அப்படி இருக்கையில் அவரைத் தான் விமர்சிக்க முடியும்’ என்கிற பகீர் கருத்தைத் தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ‘நான் செய்தியாளர்கள் சந்திப்பில் நிதானமாக பேசினேனா என என்னைக் கேள்வி எழுப்புகிறார் டிடிவி தினகரன். இவரு தான் எனக்கு வந்து ஊத்திக் கொடுத்தாரு. இவரு தொழிலே அது தானே. தினகரனின் குலத் தொழிலே ஊத்திக் கொடுத்து குடியைக் கெடுக்கிறது தான். அவனுங்க குடும்பமே அப்படித் தான் ஊத்திக் கொடுத்து குடியைக் கெடுக்கும். கூவத்தூர்ல அப்படித் தான் ஊத்திக் கொடுத்துக் குடிய கெடுத்தானுங்க. இல்லனு சொல்ல சொல்லுங்க பாப்போம் தினகரன?’ என்று ஆவேசமாக பேசியுள்ளார். ஒரு மாநில அமைச்சர், ஒரு அரசியல் கட்சித் தலைவரை தரம் தாழ்ந்து ஒருமையில் விமர்சித்து உள்ளது, கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தியா5 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்5 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு8 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!