விமர்சனம்

அதை மட்டும் சரியா பண்ணியிருந்தா C/O அட்டகாசம் ஆயிருக்கும்… C/O காதல் விமர்சனம்!

Published

on

எல்லொருக்குள்ளும் பள்ளிப் பருவத்து காதல், கல்லூரி பருவத்துக் காதல், மிடில் ஏஜ் காதல், முதுமையில் காதல் என ஒவ்வொரு பருவத்துக்கும் உரிய காதல் உருவாகியிருக்கும். (முதிர் பருவ காதலை அனுபவதித்தது இல்லை என்றாலும் அந்த வயதுக்காரர்கள் சொன்ன காதல் கதையை நாம் கேட்டாவது இருப்போம்). அந்த காதல் அனைத்தும் அந்தந்த பருவத்துக்கே உரிய காதல் உணர்வுகளுடன் நம்மை கடந்து சென்றிருக்கும். அந்த அத்தனை காதலையும் ஒரு அட்டகாசமான ட்விஸ்ட்டோட சொல்லியிருக்கும் படம் தான் இந்த C/O காதல்…

 

2018-இல் தெலுங்குவில் வெளியான C/O கஞ்சிரபாளையம் என்ற படத்தின் தமிழ் ரீமேக் தான் C/O காதல்… இந்த ரிவீவில் இரண்டு படங்களுக்குமான ஒற்றுமை வேற்றுமை என சொல்லப் போவதில்லை. உண்மையை சொல்லனும்னா நான் 2018-இல் பார்த்ததோட தமிழ் ரீமோக்கை பார்த்துதான் ஞாபகப்படுத்திக்கொண்டேன். இந்தப் C/O காதல்… தமிழில் எப்படி இருக்கு என்பதை இனி பார்ப்போம்.

C/O காதல்… அட்டகாசமான கதை… நல்ல திரைக்கதை, அதற்கு ஏற்றார் போல இசை… கதை களம்… இப்படி நான்கு வெவ்வேறு காதல் கதைகள். வெவ்வேறு காலத்தில் நடப்பது. இதை கதையாக எழுதுவது மட்டுமல்ல அதை திரையில் கொண்டுவருவதற்கு சரியான டெக்னீசியன்ஸ் தேவை. அப்படி இந்தப் படத்திற்கான டெக்னீசியன்ஸ் எல்லாம் சரியாக அமைந்து விட்டனர். அதுவும் இந்தக் கதையை அட்டகாசமாக எடிட் செய்திருக்கிறார் இந்தப் படத்தின் எடிட்டர்.

நான்கு கதையும் எந்தக் கதையுடனும் எதுவும் ஒட்டி வந்து பார்வையாளர்களை தொல்லை செய்யவில்லை துருத்தவும் இல்லை. மதுரையில் நடக்கும் கதைக்கான கூடுதல் சுவாரஸ்யத்தைக் கொடுப்பது இந்தப் படத்திற்கான இசை தான்.

எல்லாம் சரியாக அமைந்து விட்டது., கதாபாத்திரங்களின் தேர்வும் அட்டகாசம். ஒவ்வொரு பருவத்திற்குமான காதல் கதைகளின் ஆண், பெண் கதைபாத்திரங்கள் எல்லாம் சரியாக அமைந்துவிட்டன. அப்புறம் என்னதான் இந்தப் படத்தில் பிரச்னை என்கிறீர்களா? எல்லா கதாபாத்திரங்களின் நடிப்பும் நாடகத்தன்மையுடன் நடித்துள்ளார்கள். அதாவது ஆர்டிபீசியலாக இருக்கிறது. நடிக்கிறார்கள் என்பது அப்படியே தெரிகிறது. இதை மட்டும் தவிர்த்து இருந்தால் இந்தப் படம் நிச்சயம் ஒரு அட்டகாசமாக அனுபவமாக அமைந்திருக்கும். ஆனால், தெலுங்கு பட இயக்குநர் என்பதாலோ என்னவோ அப்படி அமைந்திருக்கலாம்.

Also Read: அந்த வீடியோவை பாத்துட்டு கதை எழுதிருப்பாங்க போல… பாரிஸ் ஜெயராஜ் விமர்சனம்!

நீண்ட நாளுக்குப் பிறகு முதல்மரியாதை தீபன் நடித்திருக்கிறார். இப்போது இருக்கும் ஆட்களுக்கு அவர் யார் என்றே தெரியாது. அந்த நிலாவத்தான் கையில பிடிச்சேன்”னு பாடியிருப்பாரே அவர்தான். இந்த அறிமுகம் எல்லாம் தேவையில்லைதான் என்றாலும் அவர் உண்மையில் அட்டகாசமாக நடித்திருக்கிறார்.

இந்து, கிறிஸ்துவம், இஸ்லாம் என அனைத்து மதங்களையும் விமர்சனம் செய்துள்ளது மட்டுமல்லாது, சாதி பற்றிய விமர்சனம், பெண்கள் சுதந்திரம் என அங்காங்கே படம் முழுவதும் பல சமூக அக்கறையுள்ள விஷயங்களையும் இயக்குநர் இணைத்திருப்பதும் ரசிக்கும்படியே இருக்கிறது. ஆனால், பொட்டை என்ற வார்த்தை மட்டும் பின்னணி இசை போல தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. இதை தவிர்த்திருக்கலாமே பாஸ்.

பெரிய அளவில் அறிமுகம் இல்லாத நடிகர்களை வைத்து ஒரு அழகான கதையை கொஞ்சம் பிசகினாலும் சிக்கலுக்கு உள்ளாகும் வாய்ப்புள்ள கதையை அட்டகாசமாக கொடுத்துள்ளது இந்தப் படக்குழு. காதலர் தினத்தில் பார்ப்பதற்கு ஒரு நல்ல பீல்குட் மூவி இந்த C/O காதல்…

author avatar
seithichurul

Trending

Exit mobile version