வணிகம்

இந்திய கிளையை மூடியது டிக் டாக்.. வேலை இழந்த 2000 நபர்கள்!

Published

on

டிக் டாக் செயலி நிறுவனமான பைட் டான்ஸ் இந்தியாவில் ஹேலோ உட்பட பல்வேறு செயலிகள் சேவையை வழங்கி வந்தது.

சென்ற ஆண்டு ஜூன் மாதம் இந்தியா, சீனா லடாக் எல்லையில் நடைபெற்ற எல்லை மீறல் பிரச்சனையை அடுத்து 59 சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டது. இந்திய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சீன செயலிகளைத் தடை செய்தாக இந்திய அரசு கூறியது. பின்னர் அடுத்து வந்த மாதங்களில் 118 செயலிகள் மற்றும் ஒரு சின நிறுவனத்தின் இணையதளம் வரை நீண்டது.

இந்த தடையை எப்போது இந்திய அரசு நீக்கும் என்று தெரியவில்லை. எனவே ஷார் இட், யுசி பிரவுசர் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கனவே தங்களது இந்திய கிளைகளை மூடின. இதனால் ஆயிரம் கணக்கானவர்கள் வேலையை இழந்தனர்.

சீன செயலிகளுக்குத் தடை விதித்து 8 மாதங்கள் ஆன நிலையில், இரண்டு நாட்களுக்கு 59 சீன செயலிகளுக்கு இந்திய அரசு நிரந்தரமாகத் தடை விதிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில், டிக் டாக், ஹேலோ உள்ளிட்ட ஊழியர்களுக்கு பைட் டான்ஸ் நிறுவனம் அனுப்பிய மின்னஞ்சலில், “இந்தியாவில் டிக்டாக் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என்று நம்புகிறோம். ஆனால் அதற்கான கால அளவு தெரியாததால் இந்திய கிளையை மூடுகிறோம்” என்றும் தெரிவித்துள்ளது.

பைட் டான்ஸ் நிறுவனத்தின் இந்த முடிவால் டிக் டாக், ஹேலோ உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த 2000 நபர்களுக்கு அதிகமானவர்கள் வேலையை இழந்துள்ளனர். ஊழியர்களுக்கு அதற்கான இழப்பீட்டையும் பைட் டான்ஸ் வழங்கும் என்றும் தெரிவித்துள்ளது.

Trending

Exit mobile version