தமிழ்நாடு

ஒரு கேஸ் சிலிண்டர் வாங்கினால் இன்னொரு சிலிண்டர்: இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அறிவிப்பு!

Published

on

ஒரு கேஸ் சிலிண்டர் வாங்கினால் இன்னொரு கேஸ் சிலிண்டர் கிடைக்கும் என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கூறியிருப்பது பயனாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

தற்போது 14.2 கிலோ சிலிண்டரை மொபைல் மூலம் புக் செய்து வாங்கிக் கொள்ளலாம் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் திடீரென கேஸ் சிலிண்டர் தீர்ந்து விட்டால் பெரும் திண்டாட்டம் ஆகிவிடும். இந்த திண்டாட்டத்தை போக்கும் வகையில் 14.2 கிலோ கேஸ் சிலிண்டர் உடன் தேவைப்பட்டால் 5 கிலோ குட்டி சிலிண்டரை வாங்கிக்கொள்ளலாம் என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

இந்த குட்டி சிலிண்டரை பெற விரும்புபவர்கள் அருகில் உள்ள இன்டேன் கேஸ் விநியோகிஸ்தரை தொடர்பு கொண்டு அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் 14.2 கிலோ சிலிண்டர் வாங்கும் போது ஐந்து கிலோ குட்டி சிலிண்டரும் டெலிவரி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமன்றி இந்த குட்டி சிலிண்டர் வாங்குபவர்களுக்கு ரிவார்டு புள்ளிகள் வழங்கப்படும் என்றும் அந்த புள்ளிகளை பயன்படுத்தி அடுத்தடுத்து சிலிண்டர்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் அல்லது பெட்ரோல் அல்லது டீசல் போட்டுக் கொள்ளலாம் என்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

சிறப்பு சலுகையாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பை அடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து கூறியபோது, ‘ஏற்கனவே இருக்கும் சிங்கிள் சிலிண்டர் இணைப்பை டபுள் பாட்டிலாக மாற்றிக்கொண்டு பரிசுப் பொருட்களையும் வெல்லுங்கள்’ என்று அறிவித்துள்ளது இந்த அறிவிப்பு ஒரே ஒரு சிலிண்டர் மட்டுமே வைத்திருப்பவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version