தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் பேருந்து சேவை தொடங்கியது, கோவில்கள் திறக்கப்பட்டன: இயல்பு நிலைக்கு திரும்பிய தமிழகம்!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தளர்வுகளே இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அதன்பின் வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்தவுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று முதல் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த கூடுதல் தளர்வுகள் காரணமாக தமிழகம் முழுவதும் பேருந்துகள் ஓடத் தொடங்கியுள்ளன, தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பி விட்டதாகவே கருதப்படுவது.

தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு உள்ளேயும் மாவட்டங்களுக்கு வெளியேயும் பேருந்து போக்குவரத்து இன்று காலை முதல் தொடங்கியது. பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் பயணம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலையே அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகளில் பயணிகள் பயணிக்க தொடங்கி உள்ளனர்.

அதே போல் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் திறக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பழனி முருகன் கோயில், நெல்லை நெல்லையப்பர் கோயில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் காலை முதலே தரிசனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் மாஸ்க் அணிந்து வருகிறார்களா? தனிமனித இடைவெளியை கடைபிடிக்கிறார்களா? என்பதை கோயில் ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் கவனித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழகம் முழுவதும் பேருந்துகள் ஓடத் துவங்கி உள்ளதாலும், வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டுள்ளதாலும் தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பி உள்ளதாக கருதப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version