தமிழ்நாடு
நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்து சேவை மீண்டும் தொடக்கம்!
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக. 7 மாவட்டங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பேருந்து சேவை இன்று மீண்டும் தொடங்குகிறது.
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகபட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் நாகை மாவட்டத்தில் பேருந்து சேவைகள் 24-ம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த மாவடங்களில் மதியம் 12 மணி முதல் பேருந்து சேவை தொடக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தீவிர புயலாக உருவாகி சென்னை அருகில் உள்ள மரக்காணத்தில் இன்று அதிகாலை 2:30 மணியளவில் கரையைக் கடந்தது.
எனவே புயல் பாதிப்பால் சாலைகளில் விழுந்துள்ள மரங்கள் மற்றும் மின் கம்பங்களை அகற்றும் பணிகள் காலை முதல் தீவிரமாக நடைபெற்று வந்தது. தற்போது வலுவடைந்த நிவர் புயல் வேலூர் மாவட்டத்தில் உள்ளது. அடுத்து இது ஆந்திரா வழியாக கர்நாடகா செல்லும் என்று கூறப்படுகிறது.
எனவே நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக. 7 மாவட்டங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பேருந்து சேவை 12 மணி முதல் தொடங்கப்பட உள்ளது. நேற்று தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இன்று 16 மாவட்டங்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் இந்த விடுமுறை ஏதும் இல்லாமல் அரசு அலுவலகங்கள் இயங்கும் என்று கூறப்படுகிறது.