தமிழ்நாடு

நள்ளிரவு முதலே தொடங்கியது பேருந்து சேவை: திருப்பதி, பெங்களூர் பேருந்துகள் இயக்கம்!

Published

on

தமிழகத்தில் இன்று முதல் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது என்பதும் இந்த ஊரடங்கில் அளிக்கப்பட்ட புதிய தளர்வுகளில் ஒன்று அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து இன்று காலை முதலே ஓசூரில் இருந்து பெங்களூருக்கும், சென்னை உள்பட பெரும்பாலான நகரங்களில் இருந்து ஆந்திராவிற்கும் பேருந்துகள் இயங்கத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இன்று அதிகாலை முதலே சென்னையில் இருந்து திருப்பதிக்கு பேருந்துகள் இயங்கத் தொடங்கியதை அத்து பக்தர்கள் அந்த பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர். அதேபோல் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு பேருந்துகள் வரத் தொடங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து இன்று முதல் அண்டை மாநிலங்களுக்கு பேருந்துகள் இயங்கத் தொடங்கியதை அடுத்து பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .அதிகாலை முதலே ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு செல்லும் பயணிகள் பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதை அடுத்து அம்மாநிலத்திற்கு மட்டும் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து பல்வேறு புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன அவற்றில் அண்டை மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கம், மது பார்கள் திறக்கப்படுவது மற்றும் திரையரங்குகள் திறக்கப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version