செய்திகள்

குறவர் குடும்பத்தை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட நடத்துனர்….அதிர்ச்சி வீடியோ..

Published

on

சமீபத்தில் கன்னியாகுமரியில் மீன் விற்பனை செய்யும் ஒரு மூதாட்டி அரசு பேருந்தில் ஏறியபோது, அவர் மீது துர்நாற்றம் வீசுவதாக கூறி அந்த பேருந்தின் ஓட்டுனர் அவரை கீழே இறக்கிவிட்டார். எனவே,அவர் பேருந்து நிலையத்திலேயே கதறி அழுதார். இதை அங்கிருந்த பயணி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர அந்த வீடியோ வைரலாகி பலரையும் அதிர வைத்தது.

அந்த பலரும் கண்டித்ததோடு, அந்த நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததோடு, அந்த பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மூதாட்டி கோரிக்கை வைத்தார்.

இந்த சம்பவம் நடந்து முடிந்து 2 நாளில் அதேபோல் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதுவும் அதே கன்னியாகுமரியிலேயே நடந்துள்ளது. குறவர் இனத்தை 2 வயதானவர்கள் தங்கள் பேரனுடன் பேருந்தில் ஏற அந்த பேருந்து ஓட்டுனர் அவர்கள் அனைவரையும் கீழே இறக்கிவிட்டு அவர்களின் பொருட்களை தூக்கி கீழே வீசி எறிந்தார்.

அந்த சிறுவன் கதறி அழும் வீடியோ இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த நடத்துவர் மற்றும் ஓட்டுனர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version