உலகம்

பேருந்தில் குண்டு வெடிப்பு: 13 பேர் உடல்சிதறி பரிதாப பலி!

Published

on

பாகிஸ்தானில் சற்றுமுன் நடந்த பேருந்து குண்டுவெடிப்பில் சீனர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் உள்பட 13 பேர் பலியாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பாகிஸ்தானில் சீனப் பொறியாளர்கள் சென்ற பேருந்தில் திடீரென குண்டு வெடித்து அதில் பயணம் செய்தவர்கள் சிதறி பலியாகினர். பாகிஸ்தானில் அணை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த சீனப் பொறியாளர்கள் பயணம் செய்த பேருந்து மீது வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இந்த தாக்குதலில் பேருந்தில் இருந்த 9 சீனப் பொறியாளர்கள் உள்பட 13 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

பாகிஸ்தானில் உள்ள வடக்கு பகுதியில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த 30 சீனப் பொறியாளர்கள் மற்றும் ராணுவத்தினர் ஏற்றி சென்ற பேருந்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த தாக்குதலில் 9 சீனப் பொறியாளர்கள் மற்றும் 2 துணை ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் பலியாகி உள்ளதாகவும் பாகிஸ்தான் செய்தி நிறுவனங்கள் தகவல் அளித்துள்ளன. மேலும் ஒரு சிலர் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளனர் என்றும் காயமடைந்த அனைவருமே ஆபத்தான நிலையில் உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவம் சாலையில் வைக்கப்பட்ட வெடிகுண்டா? அல்லது பேருந்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டா? என்பது குறித்து வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Trending

Exit mobile version