உலகம்
பல நாள் கோரிக்கையை நிறைவேற்றிய பாஜக.. என்ன செய்தது தெரியுமா?
டெல்லி: 2019 இடைக்கால பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டு இருப்பது பாஜகவிற்கு தேர்தல் நேரத்தில் பெரிய அளவில் உதவும் என்று கூறப்படுகிறது.
மத்திய பாஜக அரசு இன்று லோக்சபாவில் தனது கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்தது. மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தனது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இடைக்கால பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. தனி நபர் வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த பட்ஜெட் அறிவிப்பில் தனி நபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ. 2.5 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் மொத்த வருமானம் 6.25 லட்சம் வரை வருடத்திற்கு பெறுபவர்கள் எந்த விதமான வருமான வரியும் செலுத்த தேவையில்லை. இது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
வருமான வரி உச்ச வரம்பு மாற்றப்பட வேண்டும் என்று பல நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்த அளவிற்கு உயர்வு கொண்டு வரப்படும் என்று யாரும் நினைக்கவில்லை. இது மத்திய அரசு நடத்திய இன்னொரு சர்ஜிக்கல் ஸ்டிரைக்காக பார்க்கப்படுகிறது.