உலகம்
பலே பிளான்.. தேர்தலுக்காக மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட காத்திருக்கும் பாஜக!
டெல்லி: லோக்சபா தேர்தலை முன்னிட்டு வருகின்ற பட்ஜெட்டின் போது பாஜக மிக முக்கியமான அறிவிப்பை ஒன்றை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லோக்சபா தேர்தல் வந்துவிட்டது டும்.. டும்.. டும்.. என்றுதான் அனைத்து கட்சிகளுக்கும் தற்போது கேட்டுக்கொண்டு இருக்கிறது. ஆம், லோக்சபா தேர்தலில் என்ன செய்து மக்களின் வாக்குகளை வாங்கலாம் என்று அனைத்து கட்சிகளும் மிக தீவிரமாக யோசித்து வருகிறது.
இதற்காக பாஜக, காங்கிரஸ் நிறைய திட்டங்களை வகுத்து வருகிறது. அதன் ஒருகட்டமாக நாளை மறுநாள் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
வரும் பிப்ரவரி 1ம் தேதி மத்திய அரசு தனது கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. இதில் முழு பட்ஜெட்டுக்கு பதிலாக இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. கண்டிப்பாக முழு பட்ஜெட் தாக்கல் செய்ய மாட்டோம் என்று பாஜக கூறியுள்ளது.