இந்தியா
ரூ.295ல் ஆரம்பிக்கப்பட்ட பிரிட்டானியா நிறுவனம்.. இன்று ஒரு டிரில்லியன் மதிப்பு.. வளர்ந்த கதை!
வெறும் ரூ.295 முதலீட்டில் ஆரம்பித்த பிரிட்டானியா நிறுவனம் இன்று இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக அதாவது ஒரு டிரில்லியன் ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாக வளர்ந்துள்ளது.
கடந்த 130 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1892 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள ஒரு சிறிய வீட்டில் ரூ.295 முதலீடு மட்டுமே வைத்து பிரிட்டானியா நிறுவனம் தொடங்கப்பட்டது. இன்று இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரு ட்ரில்லியன் ரூபாய் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
1892 ஆம் ஆண்டு, கொல்கத்தாவில் உள்ள ஒரு சிறிய வீட்டில் 295 ரூபாய் மட்டுமே வைத்து, பிரிட்டிஷ் தொழிலதிபர்கள் குழுவொன்று பிரிட்டானிய நிறுவனத்தை உருவாக்கியது. இப்போது, 130 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய FMCG நிறுவனங்களில் ஒன்றாகும்.
இரண்டாம் உலகப் போரின் போது (1939-1945) பிஸ்கட்டுகளுக்கு அதிக தேவை இருந்ததால், இது பிரித்தானியா பிஸ்கெட் விற்பனை அதிகமாகியது. ஏனெனில் அது பிரிட்டிஷ் இராணுவத்திற்கு பிஸ்கட்களை வழங்கியது. பின்னர், நிறுவனத்தின் பெயர் 1979 இல் தற்போதைய “பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்” என மாற்றப்பட்டது.
தற்போது, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் தலைமை நிர்வாக அதிகாரியாக ராஜ்நீத் கோஹ்லியும், நிர்வாக துணைத் தலைவர் & MD ஆக வருண் பெர்ரியும் தலைமை வகிக்கின்றனர். நவம்பர் 2022 ஆம் ஆண்டு வலுவான காலாண்டு முடிவுகளின் காரணமாக பங்கு விலையில் இந்நிறுவனத்தின் பங்குகள் ஏற்றம் கண்டன. இந்த உயர்வு காரணமாக பிரிட்டானியா இன்று ரூ. 1 டிரில்லியன் மதிப்புள்ள ஒரு நிறுவனமாக உள்ளது. பிரிட்டானியாவின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 1.06 டிரில்லியன் ஆகும்.