கிரிக்கெட்

“என்னா மாதிரி ஃபீல்டிங்கு”- வைரலாகும் SAvPAK மேட்ச்சில் மார்கிரம் பிடித்த கேட்ச்

Published

on

தென் ஆப்ரிக்கா – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் இரண்டாவது டெஸ்டின் முதல் நாள் ஆடத்தில் தென் ஆப்ரிக்க வீரர் அய்டன் மார்கிரம் பிடித்த கேட்ச் வைரலாகியுள்ளது.

பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்ற நிலையில், இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்னும் கட்டாயத்தில் களமிறங்கியுள்ளது தென் ஆப்ரிக்கா.

இரண்டாவது டெஸ்டில், போட்டிக்கான டாஸ் வென்ற பாகிஸ்தான், பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் இம்ரான் பட் மற்றும் அபித் அலி ஆகியோர் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினர்.

இதில் அபித் அலி, நோர்ட் பந்து வீச்சை எதிர்கொள்ளும் போது, பந்தை தடுத்து ஆடினர். அது ஷார்ட் லெக் பகுதியில் ஃபீல்டிங் நின்றிருந்த மார்கிரமை நோக்கிச் சென்றது. சட்டென்று வந்தப் பந்தை மார்கிரம் எக்கிப் பிடித்தார். இந்த அசாத்திய கேட்சைப் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

முதல் நாள், உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

 

Trending

Exit mobile version