தமிழ்நாடு

டான்ஸ் ஆடியதால் கன்னத்தில் அறை: மணமகனை மாற்றிய மணமகள்!

Published

on

திருமணத்திற்கு முந்தின நாள் மணமகள் டான்ஸ் ஆடியதால் ஆத்திரமடைந்த மணமகன் மணமகளின் கண்ணத்தை அடித்ததால் மணமகள் அதிரடி முடிவு எடுத்து மாப்பிள்ளையை மாற்றிய சம்பவம் பண்ருட்டி அருகே நடைபெற்றுள்ளது.

பண்ருட்டியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெயசந்திரா என்பவருக்கும் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இரவு திருமணத்திற்கு முந்தைய நாள் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் மணப்பெண் ஜெயசந்திரா, மணமகன் ஸ்ரீதர் உள்பட உறவினர்கள் பாட்டுக்கு ஆட்டம் ஆடினர்.

அப்போது தனது சகோதரருடன் ஜெயச்சந்திரா நடனம் ஆடியதை பார்த்து ஆத்திரமடைந்த மணமகன் ஸ்ரீதர், ஜெயச்சந்தியாவை திடீரென கன்னத்தில் அறைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயசந்திரா, ஸ்ரீதரை திருமணம் செய்யமுடியாது என்று கூறி இந்த திருமணத்தை நிறுத்தினார். இதனை அடுத்து மணமகன் வீட்டார் திருமண மண்டபத்தை விட்டு வெளியேறினார்கள்.

இந்த நிலையில் திருமணத்திற்கு வருகை தந்திருந்த செஞ்சியை சேர்ந்த கோபிநாத் என்பவருக்கும் ஜெயசந்திராவுக்கும் உடனடியாக திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

மணமகள் கன்னத்தில் அறைந்தால் மணமகள், மணமகனை மாற்றிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version