இந்தியா

திருமணத்திற்கு முந்தைய நாள் மணமகனின் கழுத்தை அறுத்த மணமகள்: அதிர்ச்சி காரணம்!

Published

on

திருமணத்திற்கு முந்தைய நாள் மணமகனை தனியே அழைத்துச் சென்று அவருடைய கழுத்தை அறுத்த மணமகளின் செயலால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள அனகப்பள்ளி என்ற பகுதியை சேர்ந்த புஷ்பா என்ற இளம் பெண்ணுக்கு அவருடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்தனர். இருதரப்பு பெரியவர்களும் இந்த திருமணத்தை முடிவு செய்த நிலையில் திருமணத்திற்கு முந்திய நாள் ஒரு சர்ப்ரைஸ் தருவதாக மணமகனை மணமகள் ஒரு மலைப் பகுதிக்கு அழைத்துச் சென்றதாக தெரிகிறது.

அங்கு மணமகனை கண்ணை மூடச் சொல்லிய நிலையில் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மணமகளின் கழுத்தில் மணமகள் புஷ்பா அறுத்துள்ளார். இதனை அடுத்து இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அந்த பகுதியில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் இதுகுறித்து விசாரணை செய்த காவல்துறையினர் இளம்பெண் புஷ்பாவை கைது செய்து விசாரணை செய்த போது பெற்றோர்களால் நிச்சயம் செய்யப்பட்ட திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்றும் அதனால்தான் மணமகனின் கழுத்தை அறுத்ததாகவும் வாக்குமூலம் கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version