தமிழ்நாடு

திருமணமான சில நாட்களில் கணவரின் நண்பருடன் கள்ளக்காதல்: புதுப்பெண் மாயம்!

Published

on

திருமணமான சில நாட்களில் கணவரின் நண்பருடன் கள்ளக்காதல்: புதுப்பெண் மாயம்!

திருமணமான ஒரு சில நாட்களில் கணவரின் நண்பருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதால் புதுமணப் பெண் திடீரென மாயமானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மனோஜ்குமார் என்பவருக்கும் கோபிகா என்பவருக்கும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த நிலையில் தொழில் நிமித்தமாக அடிக்கடி வெளியூர் செல்லும் மனோஜ்குமார் வீட்டிற்கு அவருடைய நண்பர் சபரிநாதன் என்பவர் அடிக்கடி வந்துள்ளார் .

இதனை அடுத்து சபரிநாதன் மீது கோபிகாவுக்கு காதல் ஏற்பட்டது. இந்த நிலையில் மனோஜ்குமார் ஊருக்கு வந்திருந்த நேரம் தனது தாயார் வீட்டுக்கு செல்லப்போவதாக மனைவி கோபிகா கூறிய நிலையில் திடீரென மாயமானார்.

இது குறித்து காவல்துறையில் மனோஜ் குமார் புகார் அளித்த நிலையில் கோபிகா தாயார் வீட்டுக்கு செல்லாமல் சபரிநாதனுடன் ஓடிப்போனது தெரியவந்தது. மேலும் பேருந்தில் சபரிநாதன் உடன் கோபிகா சென்று கொண்டிருப்பதை அறிந்த மனோஜ் குமார் அந்த பேருந்தை பைக்கில் சென்று விரட்டி அங்கிருந்த மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.

இந்தநிலையில் அந்த சமயம் அங்கு வந்த சபரிநாதன் மனோஜ்குமாரை தாக்கி விட்டு, கோபிகாவுடன் மாயமானதாக தெரிகிறது. இந்த நிலையில் கல்யாணம் ஆன சில நாட்களில் மனைவியை பறிகொடுத்துவிட்டு பரிதாபத்தோடு இருக்கும் மனோஜ் குமாருக்கு அவரது உறவினர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

 

Trending

Exit mobile version