இந்தியா

திருமணமான மூன்றே நாட்களில் பணம், நகையுடன் மணமகள் மாயம்: மாப்பிள்ளை வீட்டார் அதிர்ச்சி

Published

on

திருமணமான மூன்று நாட்களில் லட்சக்கணக்கான மதிப்புடன் மணமகள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

மும்பையில் உள்ள தொழிலதிபர் மகனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த மூன்று நாட்களில் புதுமணப்பெண் 4.39 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் லட்சக்கணக்கில் பணத்துடன் திடீரென மாயமாகி விட்டதாக தெரிகிறது.

மணமகன் குடும்பத்தினர் மணமக்களுக்கு ரூபாய் ஒன்றரை லட்சம் கொடுத்து தங்கள் திருமணம் செய்து வைத்ததாக தெரிகிறது. இது குறித்து தொழிலதிபர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள நிலையில் மாயமான மணமகளை தேடும் பணியில் தற்போது காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் .

தங்களது குடும்ப நண்பர் அறிமுகப்படுத்திய பெண்தான் மணமகள் என்றும் அவர் அப்பா அம்மா இல்லாத அனாதை என்றும் இதனை அடுத்து மணப்பெண்ணுக்கு பணம் கொடுத்து மணமகன் வீட்டார் திருமணம் செய்த நிலையில் தற்போது திடீரென மணமகள் மாயமாகி இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

இந்த நிலையில் மணமகளை அறிமுகப்படுத்திய குடும்பத்தினரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இது பணத்திற்காக நடத்தப்பட்ட போலி திருமணமாக இருக்கலாம் என்ற ரீதியில் விசாரணை நடந்து வருகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version