இந்தியா

மணமேடையில் திடீரென தரையில் படுத்த மணப்பெண்: அதன்பின் என்ன செய்தார் தெரியுமா? வைரல் வீடியோ

Published

on

மணமேடைக்கு வந்த மணப்பெண் ஒருவர் திடீர் தரையில் படுத்து அதன் பின் செய்த செயல் திருமணத்திற்கு வந்தவர்களை மட்டுமின்றி திருமணம் செய்யப்போகும் மணமகனையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது .

குருகிராம் என்ற பகுதியைச் சேர்ந்த மணப்பெண் ஒருவர் திருமண மேடைக்கு வந்தார். அவருக்கு தாலி கட்டுவதற்காக மணமகன் ஆர்வத்துடன் காத்திருந்த நிலையில் மணமேடைக்கு வந்த மணப்பெண் திடீரென தரையில் படுத்தார்.

இதை கண்டு மணமகன் உள்பட மணமகன் வீட்டார் அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். எதற்காக மணப்பெண் திடீரென தரையில் படுக்கிறார் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே திடீரென அந்த மணப்பெண் தண்டால் எடுத்தார்.

அந்த மணப்பெண் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தண்டால் எடுப்பது வழக்கம் என்றும் அந்த நேரம் மணமேடைக்கு வரும்போது வந்து விட்டதால் அவர் கடமை உணர்ச்சியுடன் தண்டால் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

மணப்பெண் திடீரென மணமேடையில் மணமகன் முன்பே தண்டால் எடுத்ததை பார்த்து பலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இருப்பினும் ஒரு சில கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா என்று கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending

Exit mobile version