சினிமா
Breaking: இணையத்தில் கசிந்த ‘மாஸ்டர்’ கதை… அதிர்ச்சியில் தளபதி ரசிகர்கள்!!!
‘தளபதி’ விஜய் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்’. சில மாதங்களுக்கு முன்னரே இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. கொரோனா நோய்த் தொற்று காரணமாக, படத்தை ரிலீஸ் செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இந்நிலையில் வரும் பொங்கலுக்கு மாஸ்டர் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில், சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மாஸ்டர் படத்தின் கதை இணையத்தில் கசிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பல வெளிநாடுகளுக்கு இந்தப் படம் ஏற்கெனவே விற்கப்பட்டுவிட்டன. இதையொட்டி, அந்தந்த நாடுகளுக்கு மாஸ்டர் படத்திற்கான கதைச் சுருக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படி கொடுக்கப்பட்ட சினாப்சிஸ்தான் தற்போது கசிந்துள்ளதாம்.
வெளிவந்துள்ள கதைச் சுருக்கத்தில், ‘இளம் விரிவுரையாளரான விஜய், குடி போதைக்கு அடிமையானதால், அவர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு ஆசிரியராக அனுப்பப்படுகிறார். அங்கே இருக்கும் சிறுவர்கள் போதைக்கு அடிமையாக அந்தப் பள்ளியின் பொறுப்பாளர் விஜய் சேதுபதிதான் காரணம் என்பதைக் கண்டுபிடிக்கிறார் தளபதி. இதன்பின்னர் இருவருக்கும் இடையே நடக்கும் மோதல்தான் மீதிக்கதை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாளவிகா மோகனுடனான காதல் காட்சிகள், பாடல்கள், விஜய்யின் மாஸ்ஸான சீன்கள் உள்ளிட்டவை படத்தில் இடம்பெறுகின்றன. எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் நிலையில் மாஸ்டர் படத்தின் கதை சிறிதளவு லீக்காகியிருப்பது படக்குழுவினருக்கும் தளபதி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.