தமிழ்நாடு

#Breaking | சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

Published

on

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனையை அனுபவித்து வந்த சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

காய்ச்சல், நுரையீரல் தொற்று இருந்ததால் பெங்களூரு விக்டோரியா மருத்துவனையில் சசிகலா நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று சசிகலாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் குறைந்தது 7 நாட்கள் சிகிச்சை பெற வேண்டும்

இந்த மாத இறுதியில் ஜனவரி 27-ம் தேதி, சசிகலா 4 வருடச் சிறைத் தண்டனை காலத்திற்குப் பிறகு விடுதலையாவார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், 7 நாட்கள் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்.

எனவே சசிகலா விடுதலைக்கு முன்னாள் மீண்டும் சிறைக்குச் செல்ல மாட்டார் என்றும், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன உடன் நேரடியாகச் சென்னைக்குத் திரும்ப அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version