தமிழ்நாடு
Breaking: அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்த 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!
![Heavy rain - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/Heavy-rain.jpg)
தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை மையம்.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அடுத்த 24 மணி நேரத்திற்கு திருப்பூர், நாமக்கல், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்தைப் பொறுத்தவரை கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜனவரி 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமாக மழை பெய்யலாம். கடந்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடத்தில் அதிகபட்சமாக 9 சென்டி மீட்டர் மழைப் பெய்தது. அதைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 7 சென்டி மீட்டர் மழைப் பதிவானது.