வணிகம்
ரூ.63,000 கோடிக்கு பாரத் பெட்ரோலியத்தை தனியாருக்கு விற்கும் மத்திய அரசு!
மத்திய அமைச்சகம் இந்தியாவின் 2-ம் மிகப் பெரிய பெட்ரோலியம் நிறுவனமான பாரத் பெட்ரோலியத்தை தனியாருக்கு விற்க அனுமதியளித்துள்ளது.
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் மத்திய அரசுக்கு 53.3 சதவீத பங்குகள் உள்ளன. இந்த பங்குகளை 63,000 கோடிக்குத் தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அசாமில், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்குச் சொந்தமாக உள்ள நுமலிகர் சுத்திகரிப்பு நிலையத்தில் மத்திய அரசுக்கு 61.7 சதவீத பங்குகள் உள்ளன.
இதை வேறு ஒரு தனியார் நிறுவனம் வாங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.