செய்திகள்

வீட்டுக்குள்ள தண்ணி வந்தா வரட்டும்!..நாங்க அடிப்போம் டைவு… வைரல் வீடியோ…

Published

on

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. எனவே, சென்னை, கடலூர், தூத்துக்குடி, கன்னியாகுமாரி, போன்ற கடலோர மாவட்டங்களில் கனம்ழை பெயது வருகிறது. இது இல்லாத பல மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

எனவே, கடந்த 2 நாட்களாகவே தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் புதிதாக ஒரு புயல் உருவாகி இருப்பதால் நவம்பர் 11ம் தேதி வரை மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஒருபக்கம் சென்னையில் பல பகுதிகளி சாலைகள் மற்றும் வீடுகளில் மழை நீர் புகுந்து விட்டது. எனவே, தண்ணீரை வடிகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் புலம்பும் வீடியோக்கள் வெளியானது.

ஆனால், சிறுவர்களுக்கு இதுவே விளையாட்டு களமாக மாறியுள்ளது. சிலர் சாலையில் உள்ள நீரில் ஜாலியாக குளித்து பொழுதை போக்கி வருகின்றனர். சிலரோ தங்களின் வீடுகளில் உள்ள நீரிலேயே விட துவங்கியுள்ளனர்.

இந்நிலையில், இரண்டு சிறுவர்கள் வீட்டில் தேங்கிய நீரில் ஜாலியாக டைவ் அடித்து விளையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.

https://twitter.com/wolfprabha/status/1457984132751904771

Trending

Exit mobile version