செய்திகள்

தண்டவாளத்தை கடக்க முயன்ற சிறுவன் ரயில் மோதி பலி… விருதாச்சலம் அருகே சோகம்….

Published

on

ரயில்வே தண்டவாளத்தில் அடிபட்டு விலங்குகள் மற்றும் மனிதர்கள் இறப்பது என்பது பல வருடங்களாகவே தொடர்ந்து வருகிறது. நேற்று இரவு கூட 2 குட்டி யானைகள் ரயிலில் மோதி உயிரிழந்தது. விலங்குகள்தான் தெரியாமல் தண்டவாளத்தை கடக்கிறது எனில் மனிதர்களும் சில நேரங்களில் அப்படியே நடந்து கொள்கின்றனர். ரயில்வே துறை எவ்வளவு அறிவுரைகளை வழங்கினாலும் பலரும் கேட்பது இல்லை..

கடலூர் மாவட்டம் விருத்தச்சாலத்தை அடுத்துள்ள விஜயமாநகரம் பகுதியில் வசித்து வரும் சிறுவன் சிவனேசன். வயது 17. அவர் தனது நண்பர்களுடன் ரயில்வே தண்டவாளத்தின் அருகே காலை கடனை முடித்துவிட்டு தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.

அபோது, விருத்தாசலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த சரக்கு ரயில் அவர் மீது மோதியதில் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அவரின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி விருத்தாச்சலம் இருப்புப்பாதை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version